Lyrics
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
காத்தடிச்சா பயப்படுவ
மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டான்
புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிக்கிறேன்
காதுமடல் கடிச்சிக்கிறேன்
உஞ்சிரிப்பை ஞாபகத்தில்
அடச்சிக்கிரேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள
வெக்கத்துல ரவிக்கை தச்சி
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே
ஓ சந்திரனை தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே
பகல பாக்காத கூந்தல்
(நெத்தி சுட்டி முத்தமிடுதே)
இரவ பாக்காத தேகம்
(தங்க துகளென மின்னல் விடுதே)
பூப்போட்ட வேர்வை
மகரந்தமே மழையாச்சோ
கோச்சிக்கிட்டு நீ நடந்து
மோச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி
உன்ன கொஞ்சம் பேச விட்டு
தேன் திரட்டி சேர்த்து வச்சு
நாளாச்சு தேம்பாவணி
கழுத்து கோட்டோரம் ஏறி
(அழகுல வந்து விழு நீ)
கவித மார்போடு மோதி
(பத்து வளைவுல பித்து பிடி நீ)
நான் பாத்த வானம்
சதுரடியா விலை போச்சே
ஒத்த உசுரு உன்னால(ஒத்த உசுரு உன்னால)
நித்தம் கசியும் கண்ணால(நித்தம் கசியும் கண்ணால)
தன்னந் தனியா தூங்குற(தன்னந் தனியா தூங்குற)
குளுருதா புள்ள(குளுருதா புள்ள)
மண்ணுப்பட்டு கீருமேன்னு(மண்ணுப்பட்டு கீருமேன்னு)
வச்சிருந்தேன் மாறு மேல(வச்சிருந்தேன் மாறு மேல)
கீழப்பட்ட பாதம் ஏதும்(கீழப்பட்ட பாதம் ஏதும்)
உறுத்துதா புள்ள(உறுத்துதா புள்ள)
Writer(s): Vivek, Narayanan Santhosh
Lyrics powered by www.musixmatch.com