Lyrics

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் காவியக் கண்ணகி இதயத்திலே ஆ... காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே கோவலன் என்பதை ஊரறியும் கோவலன் என்பதை ஊரறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் இளையவரென்றால் ஆசை வரும் இளையவரென்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறிவிடும் இருவர் என்பது மாறிவிடும் இரண்டும் ஒன்றாய் கலந்துவிடும் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்
Writer(s): Kannadhasan, R Sudarsanam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out